இயக்குநரான நடிகை வரலட்சுமி சரத்குமார்..! தயாரிப்பு நிறுவனமும் தொடக்கம்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்முறையாக ஒரு திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி எனும் படத்தில் நாயகியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் கடந்தாண்டு திருமணம் செய்தார்.
இந்நிலையில், அவரது தங்கை பூஜா சரத்குமார் உடன் இணைந்து தோச டையாரிஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தத் தயாரிப்பில் தனது முதல் படமான சரஸ்வதி எனும் படத்தை அவரே இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன் சந்திரா, பிரியாமணி பிரகாஷ் ராஜ் நடிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். #SARASWATHI
The first page of #DosaDiaries ❤️
A heartfelt congratulations to our talented debut director @varusarath5, we can’t wait to see the magic you create unfold on screen
The journey of Dosa Diaries begins today, and the pages ahead are sure to shine brighter than… pic.twitter.com/CsZYOnTCK9— Dosa Diaries (@DosaDiariesOffl) September 27, 2025
It has been announced that actress Varalaxmi Sarathkumar will be directing a film for the first time.
What's Your Reaction?






