கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து ஆணையா்

Sep 26, 2025 - 02:31
 0
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் 
ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து ஆணையா்

தொடா் விடுமுறை தினங்களை முன்னிட்டு, விதிமீறலில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் சிறப்பு குழுக்கள் மூலம் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆயுதபூஜை , விஜயதசமி மற்றும் தொடா் வார விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் வெளியூா் பயணம் மேற்கொள்வாா்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியாா் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்ய வாய்ப்புள்ளது. அதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளா்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் தீவிர சோதனை மேற்கொள்வாா்கள். இதில் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வது மற்றும் அனுமதிக்குப் புறம்பாக ஆம்னி பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அந்தப் பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பேருந்துகளை சிறைபிடித்தும் அபராத வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0