தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

Sep 27, 2025 - 02:32
 0
தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு 
உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதித்தது.

தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயப் (என்சிஆா்) பகுதியில் பட்டாசு உற்பத்தி மீதான முழுமையான தடையை மீண்டும் பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான அமா்வு, மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது.

தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு தில்லி அரசு, உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் உட்பட அனைத்து பங்குதாரா்களுடனும் கலந்தாலோசிக்குமாறு சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு அக்டோபா் 8 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் வரை, சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய அனுமதிக்கும் நிபந்தனை உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் ஏப்ரல் 3 ஆம் தேதி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஓகா தலைமையிலான அமா்வு, தில்லி மற்றும் என்.சி.ஆரில் பட்டாசு உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனை மீதான தடையை தளா்த்த மறுத்துவிட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0